My Blog List

Monday, 4 August 2014

சிரிப்பு



இறந்துக் கொண்டிருந்த 
மனிதன் 
சிரித்தபடி இருந்தான் 

மரணத்தின் ஓலம் 
அவனின் செவியில் 
விழாமல் இருக்க - சத்தமாய்
சிரித்தபடி இருந்தான்.

அவனைச் சுற்றி இருந்தவரின்
சோகத்தை விரட்ட - பல் தெரிய
சிரித்தபடி இருந்தான்

தன் மனதிலிருந்த மரணபயம்
வெளி தெரியாமலிருக்க-
கண்ணீர் சுரக்கும் வரை
சிரித்தபடி இருந்தான்.

உடலின் வலி - தன்
முளைக்கு எட்டாதபடி
விழுந்து விழுந்து
சிரித்தபடி இருந்தான்.

இறந்துவிட்ட தன் உடலைக் கண்டு
உருண்டு அழும் உறவைக் கண்டு

சிரித்தபடி இருந்தான்.

Thursday, 31 July 2014

பிரிவு

சிதறியிருந்த செல்களை
பார்க்கையில் 
....
சிரிப்பதா - இல்லை 
அழுவதா என்றே தெரியவில்லை. 
....
ஒவ்வொன்றாய் எடுக்கையில்
மனம் தானே
ஒவ்வொன்றையும் எண்ணியது.
.....
சற்று மூன் வரையிலும்...
ஒன்றாய் இருந்தது -ஒரே
வட்டமாக இருந்தது
இப்பொழுது
சில சதுரமாய் ...
பல முக்கோணமாய் ...
பற்பல துகள்களாய் ...
தெறித்திருந்தது...!
.....
சிதறிய செல்களை -எப்படியும்
ஒட்டிடலாம் -என்றெண்ணியிருந்த மனம்
எண்ணுவதை நிறுத்தியிருந்தது.
.....
துகள்களை ஒட்டுவது எப்படி?

Wednesday, 30 July 2014

வலி

காதலும் 
நட்பும்

ஒன்றுதான் 

மனம் வலித்திடும் போது.