My Blog List

Thursday, 31 March 2016

காமம்

நீ சம்மதித்த 
அந்த நொடியில்
மிச்சம் மீதியிருந்த
அச்சமும் 
அசிங்கப்பட்டு ஓடியது

அன்னியமாய்...!!!

இருட்டிய நிலா

குதித்துக்
குதித்து தான்
நடக்க வேண்டியிருந்தது

குதிப்பதை
எப்படி
நடை என சொல்வது?

நா
வறண்டிருந்தது

ஏதும் இல்லை
எதுவுமே இல்லை...!!!

மூச்சி திணறுகையில்

முடிந்துவிடாத இந்த
வட்டம்
என ஏங்கிய இதயம்- இது 
சதுரம் இல்லையா 
என திகைத்தது...!

நிழல் இல்லை
ஒரே இருட்டு

சூரியன் இலையோ
என் எண்ணுகையில்- பேயும் 
இருக்காது
என திடப்படுத்தியது மனம் ...

மெல்லிய கோடு மட்டும்தெரிந்தது
வெளிச்சமான கோடு

ஒரே குதி !!

அப்பப்பா விழுந்திருந்தேன்..!
திரும்பி பார்க்கையில்
நிலா .....!!!

இப்பொழுது வெளிச்சமாய்
தெரிந்தது !