My Blog List

Monday, 22 February 2016

இதயத்தின் இருள்

கருத்த என் கன்னங்களில்
வழிந்தோடும் கண்ணீர்
குருதியும்
தீய்ந்திருக்கும் உன்
பாராமுகம் கண்டு...

என் கதறலின் கருமையை
உன் செவியரிய  
வாய்ப்பில்லை...
என் துக்கங்களை எல்லாம்
திரட்டி
உருட்டி
எடுத்து  
உனக்கு எட்டா இடத்தில்
சேமிக்கிறேன்

ஒரு நாள்
நீயறிவாய்
கருப்பில் இருக்கும் தெளிவு
இருளில் மறைவதில்லை என.






Wednesday, 3 February 2016

பரிசு

சுவடுகளே இல்லாத
இரவுகளின் வருகைகளின்
பரிசை  சுமக்கையில்

அன்று பிரியத்தால் காய்ந்து
போன உதடுகள்
இன்று பிளந்தும் போயின

குவிந்திருந்த
உன் ஸ்பரிச நினைவுகளை
துடைத்தெடுக்க
இயலாமல்
பெற்றேடுக்கிறேன்

அன்று
களவுபோனது

இன்று என்னைப்
பார்த்து கண் சிமிட்டி
சிரிக்கின்றது

நம்மின் நினைவுகளை
அசைப்போட்டு...

மீண்டும் மீண்டும் -நான்
ஆசையாய்
தழுவிட ..!!!