My Blog List

Tuesday, 10 March 2015

~* மடியின் கனம் *~

இன்று என் மடி
நிறைந்திருந்தது

வழ வழாவென்றிருந்தாலும்
இரத்த பிசுப்பாய் இருந்தாலும்

எட்டி எட்டி உதைத்தாலும்
என் உணவை எட்டி
பறித்தாலும்

கதறி கதறி அழுதாலும்
கந்தலாய் துவண்டாலும்

என் மடியும்
தாயானதால்
நான் சிலிர்த்திருந்தேன்...

என்னை சுற்றிலும் ஒரே கூட்டம்

கொசுக்கள் இசையாய் இசைக்க
எறும்புகள் ஆட்டமாய் ஆட
கரப்பான் கை தட்ட
எலிகள் நோட்டமிட

என் மடியிலிருக்கும்
மழழையை
மகிழ்ச்சி ஆரவாரமிட்டு
வரவேற்றன.

இதுவரை இப்படி ஒரு கட்சியை
நான் காணவில்லை! -இதுவரை
என் மடி
இப்படி
கனத்ததில்லையே!

என் தாய்மை எல்லாம்
ஊற்றெடுக்க
என் மடியில் கிடக்கும்
சிசுவை அனைத்துக்கொள்கிறேன்

இனி உன் அலறல்
அடங்கட்டும்
மெல்ல ...!

Wednesday, 11 February 2015

குப்பை

நீ
கொடுத்தவை
அனைத்தையும்
சேர்த்து வைத்துப் பார்கையில்

சேர்ந்தவை
அனைத்தும்
குப்பைகளாக
குழுமியிருக்க

எனது பயணத்திற்கு
ஏதுவாக..
என் பெட்டி சுமையின்றியிருக்க

தரம்பிரித்து
குப்பையை
குப்பையிலும் - நல்லதை
பெட்டியிலும் வைத்தேன்.

பொருக்கி எடுத்த
குப்பைகளை
மீண்டும் தரம்பிரித்து

இனித்தத்தையும்
ருசித்ததையும்
ரசித்ததையும்

திரும்ப பொருக்கிக்கொண்டேன்

மீதம் நின்ற குப்பைகள்

என்னை
எரித்திடாதே ...!!!
புதைத்திடாதே...!!!
என கூச்சலிட....

சீ... போகட்டும் என
அதையும் பொறுக்கியெடுத்து
பெட்டியில் வைத்தேன்

மீண்டும் என் மனபெட்டி
உன் குப்பைகளால்
நிரம்பி வழிய வழிய
சுமந்து செல்கிறேன்

சவப்பெட்டிக்குள்.

Tuesday, 10 February 2015

உனது வருகை


இமைகள் முடியிந்த போது தான்
நீ வந்திருக்க வேண்டும்

உன் அருகாமையை உணர்ந்தும் -என்
இமை திறக்க மனமில்லை...

உனக்கு ஒரு சில நொடி தனிமையை கொடுக்கவே நான் விரும்பினேன்..

என்னை நீ ரசிக்க !!!

என்னை நீ காண்பாய் - என்னைக் கண்டு
ரசித்திருப்பாய் என
எண்ணி எண்ணி
சிலிர்த்திருந்தேன்.

இமைகளை மெல்லமாய் திறந்து
உன் திருட்டுத்தனத்தை ரசிக்க
எண்ணினேன்.

தன் தடத்தை
அழித்துச் சென்றிருந்தது..

உன் ஆன்மா...

என்னை நான் மாய்த்துக்கொண்டிருக்கும் போது ...

என்னை நான் மாய்த்துக்கொண்டிருக்கும் போது ...

என் உயிர் -உடலைவிட்டுப்
பிரிந்துக் கொண்டிருக்கும் போது ..

கண்களை திறக்க முடியாமல் தவித்த போது ..
முச்சுத் தினறிக்கொண்டுடிருந்த போது ...

தொண்டை அடைத்து , நா வறண்டிருக்கும் போது
வயிற்றில் பிரழ்வுகள் ஏற்பட்டபோது ...

அடங்காமல்...
அடக்க முடியாமல் மலமும் சிறுநீரும் வெளியேறியபோது...

என் உடலின் எல்லா அங்கமும் -என்னை
மீறி இயங்கிக் கொண்டிருந்த போது

மனம் கேட்டது ..

உன்னைக்
காதலித்தது
தவறோ என்று ...!!

இறந்துவிட்ட இதயம் ....



அவள் விட்டுக் சென்ற இதயத்தை
இருட்டரையாக்கி
தடவிப் பார்கிறேன்.
கைகளில் ஒட்டும் பிசுபிசுப்பை
கண்ணீர் என்பதா?
இரத்தக்கசிவென்பதா?
உணர்சிகளற்ற இந்த
குடுவை
மரணம் என்றால்
இறந்துவிட்ட - என்
இதயத்தை
எரித்துவிடுங்கள்.
கசின்தொழுகும் அந்த திரவியம்
எரிபதற்கு ஏதுவாக
உருமாறி உருகும்.
ஓலமிடாத இந்த
இதயம்
அமைதியாகவே
சமாதியாகட்டும்.
அவளின் இருப்பிடம் நோக்கி கூட
தூவி விடவேண்டாம் - என்
இதயச் சாம்பலை
அவளின் நாசி வழி புகுந்து
இதயத்தில் சப்பணமிட
எனக்கு விருப்பமில்லை.
அவளின் காதலையும்
மறவாமல்
எரித்துவிடுங்கள் - என்
இதயத்துடன்.