My Blog List

Monday, 1 August 2016

கண் படா கொம்புகள்

Thanks for the image


கண் படா - தன் 
கொம்புகளைத் 
தீட்டிக்கொள்கின்றாள்

வடிவில்லாத கொம்புகளுக்கு 
வர்ணமிட்டு ...வளமாக்குகிறாள் 

கூற்மையற்ற கொம்புகளால் 
அனைத்தையும் குத்திக் கிழிக்கையில் 

கொம்புகளின் கணம் பெருகி 
அவளும் அமுங்கி அழுவதைக்கண்டு 

கண் படா கொம்புகள் 
களிப்புடன் வளருகின்றன.

உருவமும் உணர்வும் 
இல்லாத கொம்புகளை 
வளர்ப்பவள் – தன் 

உறவுகளை உரமாக்குகிறாள்...

Thursday, 30 June 2016

காலம்










சென்று வந்த இடங்களை –மீண்டும் 
நினைவில் வைத்துத் தடவிப்  
பார்க்கின்றேன்.
விரல்கள் உணராத நினைவுகளை - மனம்
வருடிப் பார்த்தது...!!!

சுகங்கள் எல்லாம் நிழலாகியிருக்க ...

துக்கங்கள் ...

இன்னமும் இதயத்தைப்

பிழிந்தெடுத்தன

தீர்க்கப்படாத ஆரம்பங்கள் 
முண்டங்களாக என்னை முறைத்தன ..!!!... 
இரக்கமின்றி இதயத்தை 
இருக்கின...!!!

இருண்டு - இருபட்டுபோன 
இந்த இதயக் காயங்களை ஆற்ற - காலத்திற்கும்
இல்லை அனுமதி...!!!


என்
காலம் முடிகையில் - இந்த
காயங்களும் காற்றாகி - இனி
என்றென்றுமே நிலைத்திருக்கும் 

இன்னொரு மனதில்....!!!




Tuesday, 28 June 2016

அன்பு

*என்றுமே என்னை 
நிற்க வைத்து 
அழகு பார்த்த பூமி – இன்று
விழ வைத்தது ... !!!
அன்பாய் கன்னத்தில் 
முத்தமிடவாகதான் 
இருக்கும்....*

இறப்பின் மரணம்

சுவாசம் வெரும்
காற்றாகி போகையில்
நிகழவில்லை-என்
மரணம்...

சுமையென
எனை நீ
விலகியபோதே
ஜீவன்
மரணித்துவிட்டிருந்தது...

மீதமிருந்த துடிப்பும்
நரம்பினுடையதே
இதயம்
இறுகியிறந்திருந்தது

கோணல்களின்
முடிவில்
அறிமுகமான-நமது
நேர்முகநட்பும்
அழிந்திருந்தது...

இனி -என்
மரணம் 
மறுபடியும்
பிறக்கபோவதில்லை ...

Tuesday, 24 May 2016

ஆயுள்

குறைந்துக் கொண்டே
வரும் எனது - ஆயுள்
நாட்களை
கொண்டாடித் தீர்த்துவிடுகிறேன்
பிறந்த நாளாய் ...

மரணத்தை நோக்கிய - என்
பயணத்தைக் கொண்டாடுகையில்
பல நண்பர்களையும்
சில உறவினர்களையும்
சேர்த்துக் கொள்கிறேன்.

ஆத்மாவின் குடியிருப்புக்
கூட்டின் ஒப்பந்த பத்திரத்தைக்
கையெழுத்திட்டுத் தருகையில்
கைதட்டிப் பாடி சிரிக்கும்
கூட்டத்தைக் கண்டு – நானும்
சிரிகின்றேன்.

அந்தக் காலம் அதிக தூரமில்லை
இதே போன்று
மலர்களைத் தூவி ...
தீபம் ஏற்றி ...
பாடல் பாடி ...




Thursday, 31 March 2016

காமம்

நீ சம்மதித்த 
அந்த நொடியில்
மிச்சம் மீதியிருந்த
அச்சமும் 
அசிங்கப்பட்டு ஓடியது

அன்னியமாய்...!!!

இருட்டிய நிலா

குதித்துக்
குதித்து தான்
நடக்க வேண்டியிருந்தது

குதிப்பதை
எப்படி
நடை என சொல்வது?

நா
வறண்டிருந்தது

ஏதும் இல்லை
எதுவுமே இல்லை...!!!

மூச்சி திணறுகையில்

முடிந்துவிடாத இந்த
வட்டம்
என ஏங்கிய இதயம்- இது 
சதுரம் இல்லையா 
என திகைத்தது...!

நிழல் இல்லை
ஒரே இருட்டு

சூரியன் இலையோ
என் எண்ணுகையில்- பேயும் 
இருக்காது
என திடப்படுத்தியது மனம் ...

மெல்லிய கோடு மட்டும்தெரிந்தது
வெளிச்சமான கோடு

ஒரே குதி !!

அப்பப்பா விழுந்திருந்தேன்..!
திரும்பி பார்க்கையில்
நிலா .....!!!

இப்பொழுது வெளிச்சமாய்
தெரிந்தது !

Monday, 22 February 2016

இதயத்தின் இருள்

கருத்த என் கன்னங்களில்
வழிந்தோடும் கண்ணீர்
குருதியும்
தீய்ந்திருக்கும் உன்
பாராமுகம் கண்டு...

என் கதறலின் கருமையை
உன் செவியரிய  
வாய்ப்பில்லை...
என் துக்கங்களை எல்லாம்
திரட்டி
உருட்டி
எடுத்து  
உனக்கு எட்டா இடத்தில்
சேமிக்கிறேன்

ஒரு நாள்
நீயறிவாய்
கருப்பில் இருக்கும் தெளிவு
இருளில் மறைவதில்லை என.






Wednesday, 3 February 2016

பரிசு

சுவடுகளே இல்லாத
இரவுகளின் வருகைகளின்
பரிசை  சுமக்கையில்

அன்று பிரியத்தால் காய்ந்து
போன உதடுகள்
இன்று பிளந்தும் போயின

குவிந்திருந்த
உன் ஸ்பரிச நினைவுகளை
துடைத்தெடுக்க
இயலாமல்
பெற்றேடுக்கிறேன்

அன்று
களவுபோனது

இன்று என்னைப்
பார்த்து கண் சிமிட்டி
சிரிக்கின்றது

நம்மின் நினைவுகளை
அசைப்போட்டு...

மீண்டும் மீண்டும் -நான்
ஆசையாய்
தழுவிட ..!!!