My Blog List

Friday, 19 April 2019

உரிமை

என்
கண்களில் 
காட்சிகள் 
காலியாகவே 
இருக்கட்டும் ..!!!

என் 
பாதைகள் 
அனைத்தும் 
தவறியதாகவே 
இருக்கட்டும் ...!!! - அவை 
எல்லைகள் 
அற்றதாகவே 
இருக்கட்டும் ...!!! 

திக்கு திசை 
இன்றி -என் 
பயணம்
தொடரட்டும் 
எவ்வழியும் - என் 
வழியாகட்டும்!!..

தொடங்கிய 
இடத்தில் முடிந்தாலும் - நான்
தொலைந்தே 

போயிருந்தாலும் 

என் 
பயணம் 
எனதாகவே 

இருக்கட்டும்   ... !!! 

வண்ண மலர்களை

அழகாய் இருந்த 
பூக்களை 
அவள் கோர்த்திருந்தாள் 

கோர்த்திருந்த பூக்களை 
சூடிக்கொண்டாள் 

அழகாய் தெரிந்த 
கற்களை
அவள் சேர்த்திருந்தால் 

வண்ன வண்ண மலர்களை 
அதில் தீட்டியி ருந்தால் 

 தீட்டிய மலர்களையும்
சூட்டிக்கொண்ட மலர்களையும் 

சேர்த்தே 

நேசித்திருந்தது 
அவளின் 
மனம்  

உடனே வாடும் 
மலர்களையும் 

நின்று தேயும் கற்களையும் 

அவள் 
விடுவதாய் இல்லை 


என்றுமே !!

மனதின் ஓலம்

துரத்திக் கொண்டிருக்கும் 
நினைவுகளைக் 

கைக்கொண்டு தடுக்கின்றேன் 
கண்ணீரில் கரைக்கப் பார்க்கிறேன்
கதறலின் ஊடே மறைக்கிறேன் 

அழகான முத்தங்கள் 
அரவணைத்த கரங்கள் 
கோர்த்திருந்த விரல்கள் 
தழுவியிருந்த தோள்கள் -என 

மறுக்கப்பட்ட   அனைத்தும் 

நான் மட்டுமே அறிய 
நினைவுகளாய் துரத்தியி ருக்க 


கண் மூடி 

போதும் போதும் என 

உள்வாங்கி

என்னுள்ளேயே 
தொலைகிறேன்.