காலத்தை கட்டி வைத்து
கேட்கனும் -ஏன்
உனக்கு இவ்வளவு அவசரம்...
காலம் தான் பதில் சொல்லும் என்றார்கள்
நீ போகும் அவசரத்தில் -என்
கேள்விகளுக்கு விடையளிக்காமல் போய்விடாதே
வாய் விட்டு சொன்னால் காற்றோடு போய்விடுமோ என
மனதினுள் வைத்திருக்கிறேன் காலமே..
என் மனதை கேள் - அதன்
கேள்விகள் தெரியும்
பெண் மனம் இது
ஆகையால் -கொஞ்சம்
பொறுமை... திறமையோடு கேள்
இல்லையேல் எதுவுமே புரியாமல் போய்விடும் உனக்கு.
No comments:
Post a Comment