கருத்த என் கன்னங்களில்
வழிந்தோடும் கண்ணீர்
குருதியும்
தீய்ந்திருக்கும் உன்
பாராமுகம் கண்டு...
என் கதறலின் கருமையை
உன் செவியரிய
வாய்ப்பில்லை...
என் துக்கங்களை எல்லாம்
திரட்டி
உருட்டி
எடுத்து
உனக்கு எட்டா இடத்தில்
சேமிக்கிறேன்
ஒரு நாள்
நீயறிவாய்
கருப்பில் இருக்கும் தெளிவு
இருளில் மறைவதில்லை என.
No comments:
Post a Comment