My Blog List

Wednesday, 3 February 2016

பரிசு

சுவடுகளே இல்லாத
இரவுகளின் வருகைகளின்
பரிசை  சுமக்கையில்

அன்று பிரியத்தால் காய்ந்து
போன உதடுகள்
இன்று பிளந்தும் போயின

குவிந்திருந்த
உன் ஸ்பரிச நினைவுகளை
துடைத்தெடுக்க
இயலாமல்
பெற்றேடுக்கிறேன்

அன்று
களவுபோனது

இன்று என்னைப்
பார்த்து கண் சிமிட்டி
சிரிக்கின்றது

நம்மின் நினைவுகளை
அசைப்போட்டு...

மீண்டும் மீண்டும் -நான்
ஆசையாய்
தழுவிட ..!!!













No comments:

Post a Comment