My Blog List

Thursday, 30 June 2016

காலம்










சென்று வந்த இடங்களை –மீண்டும் 
நினைவில் வைத்துத் தடவிப்  
பார்க்கின்றேன்.
விரல்கள் உணராத நினைவுகளை - மனம்
வருடிப் பார்த்தது...!!!

சுகங்கள் எல்லாம் நிழலாகியிருக்க ...

துக்கங்கள் ...

இன்னமும் இதயத்தைப்

பிழிந்தெடுத்தன

தீர்க்கப்படாத ஆரம்பங்கள் 
முண்டங்களாக என்னை முறைத்தன ..!!!... 
இரக்கமின்றி இதயத்தை 
இருக்கின...!!!

இருண்டு - இருபட்டுபோன 
இந்த இதயக் காயங்களை ஆற்ற - காலத்திற்கும்
இல்லை அனுமதி...!!!


என்
காலம் முடிகையில் - இந்த
காயங்களும் காற்றாகி - இனி
என்றென்றுமே நிலைத்திருக்கும் 

இன்னொரு மனதில்....!!!




No comments:

Post a Comment