தாயைப் பற்றி பேசியதெல்லாம்
போதும்
குளிக்க வைத்து-புது
துணி உடுத்தவைத்து -அழகு
பார்த்ததெல்லாம்
போதும்
மடியில் படுத்துப் படமெடுத்ததெல்லாம்
போதும்
இனிப்பு குறைத்து
கொழுப்பு குறைத்து- பண்டம்
ஊட்டியதெல்லாம்
போதும்
எதேதோ பரிசளித்ததெல்லம்
போதும்
கொஞ்சம் இடம்
கொடுங்கள் போதும்...!!!
மகனும்
மகளும் வரலாம் -அவ்வழி
நோக்கி அமரவேண்டும்
காத்திருப்பதே போதும் ...
No comments:
Post a Comment